sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஓய்வூதியர்கள் வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்; நவ.1 முதல் சிறப்பு முகாம்

/

ஓய்வூதியர்கள் வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்; நவ.1 முதல் சிறப்பு முகாம்

ஓய்வூதியர்கள் வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்; நவ.1 முதல் சிறப்பு முகாம்

ஓய்வூதியர்கள் வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்; நவ.1 முதல் சிறப்பு முகாம்


ADDED : அக் 25, 2024 12:40 AM

Google News

ADDED : அக் 25, 2024 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : ஓய்வூதியதாரர்கள் வீடு தேடி வந்து டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் வழங்கும் திட்டத்தில் பயன்பெறலாம் என தேனி கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்து ள்ளார்.

மத்திய அரசு ஓய்வூதியர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ராணுவ, இதர ஓய்வூதியர்கள் நவ.1 முதல் தங்களின் உயிர்வாழ் சான்றிதழ் சமர்பிக்க கருவூலத்துறை கோரியுள்ளது.

நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்பிக்க இயலாதவர்கள் தபால்துறையின் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி, ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே, தபால்காரர்கள் மூலம் பயோமெட்ரிக் அல்லது ஸ்பேஸ் ஆர்.டி., செயலி மூலம் டிஜிட்டல் உயிர்வால் சான்றிதழ் (ஜீவன் பிரமான்) சமர்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 செலுத்த வேண்டும். இச் சேவையை பெற விரும்பும் அனைத்துத்துறை ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்கள், அல்லது தங்கள் பகுதி தபால்காரரை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் https://ccc.cept.gov.in/servicerequest/request.aspx என்ற இணைய முகவரி மூலமும், Postinfo செயலியை பதிவிறக்கம் செய்தும் கோரிக்கையை பதிவு செய்யலாம். கூடுதல் விபரங்களுக்கு 04546 - 260501 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இச்சேவையை வழங்க அனைத்து தபால் நிலையங்களிலும் நவ.1 முதல் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன என, தேனி கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்தார்.

மேலும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், அலைபேசி எண். பி.பி.ஓ., எண், ஓய்வூதிய கணக்கு விபரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகைப் பதிவு செய்தால் ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிழை சமர்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us