sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

செறிவூட்டிய அரிசியில் தயாரித்த விதவிதமான சாதம் வழங்கல் தினமலர் செய்தி எதிரொலி

/

செறிவூட்டிய அரிசியில் தயாரித்த விதவிதமான சாதம் வழங்கல் தினமலர் செய்தி எதிரொலி

செறிவூட்டிய அரிசியில் தயாரித்த விதவிதமான சாதம் வழங்கல் தினமலர் செய்தி எதிரொலி

செறிவூட்டிய அரிசியில் தயாரித்த விதவிதமான சாதம் வழங்கல் தினமலர் செய்தி எதிரொலி


ADDED : செப் 30, 2024 05:09 AM

Google News

ADDED : செப் 30, 2024 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் செறிவூட்டிய ரேஷன் அரிசியால் தயார் செய்யப்பட்ட சர்க்கரைப் பொங்கல், தயிர், தக்காளி சாதம் தயாரித்து நுகர்பொருள் வாணிப கழகம் விவசாயிகளுக்கு வழங்கினர்.

தேனியில் செறிவூட்டிய ரேஷன் அரிசியை பிளாஸ்டிக் அரிசி என கருதி அல்லிநகரம் பகுதியில் மூதாட்சி சரஸ்வதி உட்பட அப்பகுதி மக்கள் ரேஷன் அரிசியை வாங்கி பயன்படுத்தாமல் வைத்திருந்தனர்.

இதுகுறித்து தினமலர்நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

கலெக்டர் ஷஜீவனா உத்தரவில், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் செந்தில்குமார்,கலெக்டர் அலுவலகத்தில் நடந்தவிவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசியால் தயார் செய்யப்பட்ட சக்கரைப் பொங்கல், தயிர், தக்காளி சாதங்களை விவசாயிகளுக்கு வினியோகம் செய்து, செறிவூட்டப்பட்ட அரிசி பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






      Dinamalar
      Follow us