/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஏப்.30ல் மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம்
/
ஏப்.30ல் மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம்
ADDED : ஏப் 28, 2025 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் தேனி, பெரியகுளம் தாலுகாக்களில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு பெரியகுளம் சப் கலெக்டர் அலுவலகத்திலும், ஆண்டிபட்டி தாலுகாவில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்திலும் ஏப்.30ல் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
கூட்டம் காலை 10:00 மணியில் இருந்து மதியம் 1:00 வரை நடைபெறும். மாற்றுத்திறனாளிகள், சங்க நிர்வாகிகள் புகார்கள், கோரிக்கைகளை மனுவாக வழங்கி பயன்பெறலாம். பங்கேற்க முடியாத மாற்றுத்திறனாளிகள் தங்கள் பாதுகாவலர்கள் மூலம் மனுக்களை வழங்கலாம் என, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

