/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இரு குடும்பத்தினர் இடையே தகராறு: 4 பேர் கைது
/
இரு குடும்பத்தினர் இடையே தகராறு: 4 பேர் கைது
ADDED : ஏப் 10, 2025 06:26 AM
பெரியகுளம்: கணவன், மனைவி விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், இரு குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட தகராறில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரியகுளம் கீழ வடகரைபெருமாள்புரத்தைச் சேர்ந்த முருகன் இவரது மனைவி மாசிலாமணி 51. இவர்களது மகள் ஜெயந்திக்கும் 30. டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த குருசாமி மகன் ராஜேஷ்குமாருக்கும் 34. திருமணம் நடந்தது. இரு குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கின்றனர். தேனி மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் பெருமாள்புரத்தில் கோயில் திருவிழாவிற்கு பேரக்குழந்தைகளை அழைத்து வர முருகன், மாசிலாமணி, ராஜேஷ்குமார் வீட்டிற்கு சென்றார். அங்கு குருசாமி அவரது மனைவி உமாதேவி ஆகியோர், முருகன், மாசிலாமணியை அடித்து காயப்படுத்தினர். தென்கரை போலீசார் குருசாமி, உமாதேவியை கைது செய்தனர்.
ராஜேஷ்குமார் புகாரில்: நீதிமன்றத்தில் எனது மகள் ஜெயந்தி மீதான வழக்கை வாபஸ் வாங்குங்கள் என முருகன், மாசிலாமணி கூறினர். நீதிமன்றத்தில் வந்து பேசுங்கள் என்றேன். அதற்கு என்னை அவதூறாக பேசி அடித்தனர். முருகன், மாசிலாமணியை போலீசார் கைது செய்தனர்.