sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வெட்டிய மரக்கிளைகளை அகற்றாததால் இடையூறு

/

வெட்டிய மரக்கிளைகளை அகற்றாததால் இடையூறு

வெட்டிய மரக்கிளைகளை அகற்றாததால் இடையூறு

வெட்டிய மரக்கிளைகளை அகற்றாததால் இடையூறு


ADDED : செப் 17, 2025 03:45 AM

Google News

ADDED : செப் 17, 2025 03:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் : பெரியகுளம் பழைய பஸ் ஸ்டாண்ட்டில் நகராட்சி வணிக வளாகம் உள்ளது. இங்கு தரைதளத்தில் டி.எஸ்.பி., அலுவலகம், இ--சேவை மையம், முதல் தளத்தில் ஸ்டேட் பாங்க் கிளை செயல்பட்டு வருகிறது.

இந்த வளாகத்தில் பழமையான அரச மரம் இருந்தது. இதன் கிளைகள் அதிகளவில் வளர்ந்தன. இதில் நாரைகள் கூட்டமாக தங்கி பல எச்சத்தினை உமிழ்ந்தது. அதிலிருந்து வீசும் துர்நாற்றத்தால் அந்தப்பகுதியினர் சிரமப்பட்டு வந்தனர்.

இதனால் ஜன்னல்களை எப்போதும் மூடிவைத்தனர். அலுவலகங்களுக்கும் இதே நிலை இருந்தது. பொதுமக்கள் புகாரில் நகராட்சி நிர்வாகம் உத்தரவில் 100 மீட்டர் சுற்றளவு மரக்கிளைகள் வெட்டப்பட்டது. இதனால் நாரைகள் இடமாறியது.

வெட்டப்பட்ட மரக்கிளை துண்டுகள், கழிவுகள் டி.எஸ்.பி., அலுவலகம் முன்பு குவிந்து கிடக்கிறது. வங்கிக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் மரக்கழிவுகளை தாண்டி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் கழிவுகளை அகற்றி, தூய்மைப்படுத்த வேண்டும்.-






      Dinamalar
      Follow us