தேனி: தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. அகாடமி பொருளாளர் கணேஷ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் மாடசாமி முன்னிலை வகித்தார்.
அகாடமி தலைவர் சையது மைதீன் வரவேற்றார். ஓய்வூ பெற்ற வனச்சரகர் அமானுல்லா போட்டிகளை துவக்கி வைத்தார். போட்டிகள் 8 வயது, 10வயது, 12 வயது, 14 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் நடந்தது.
எட்டு வயது பிரிவில் நித்தின்ராஜ், சிந்து ஜஸ்வின், மோனிஷா, 10 வயது பிரிவில் தியாஸ்ரீ, தேகந், ஸ்ரீஆக்னியா, 12 வயது பிரிவில் ராஜாமுகமது, புவன்சங்கர், நிலேஷ்முகுந்தன், 14 வயது பிரிவில் அஸ்வத், தாரணிக்காஸ்ரீ, சித்தேஷ் ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு டாக்டர் கிருஷ்ணவேணி பரிசு வழங்கினார்.
வெற்றி பெற்ற 32 மாணவர்களும் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் நடக்க உள்ள மாநில அளவிலான செஸ் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். போட்டி ஏற்பாடுகளை அஜ்மல்கான் செய்திருந்தார்.

