ADDED : பிப் 13, 2026 06:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க., நகர செயலாளர்கள் பாலமுருகன், நாராயணபாண்டி தலைமை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் முருகேசன், நகர துணைச்செயலாளர் மகாராஜன் இளைஞரணி அமைப்பாளர் அரவிந்த், இந்திய கம்யூ., நிர்வாகி ராஜ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூ., தர்மர், காங்கிரஸ் முனியாண்டி, ம.தி.மு.க., நிர்வாகி பெரியகருப்பன் பங்கேற்றனர்.
ஆண்டிபட்டி: தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எம்.எல்.ஏ., மகாராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி காங்., இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., வி.சி.க., ம.தி.மு.க., உட்பட தி.மு.க., மற்றும் நிர்வாகிகள் பலர் பேசினர்.

