sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெரியகுளம் நகராட்சி துணைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் தி.மு.க., தலைவர், 23 கவுன்சிலர்கள் ஆதரவு

/

பெரியகுளம் நகராட்சி துணைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் தி.மு.க., தலைவர், 23 கவுன்சிலர்கள் ஆதரவு

பெரியகுளம் நகராட்சி துணைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் தி.மு.க., தலைவர், 23 கவுன்சிலர்கள் ஆதரவு

பெரியகுளம் நகராட்சி துணைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் தி.மு.க., தலைவர், 23 கவுன்சிலர்கள் ஆதரவு


ADDED : ஜன 30, 2024 12:40 AM

Google News

ADDED : ஜன 30, 2024 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி துணைத்தலைவர் ராஜாமுகமது (தி.மு.க.,) மீது, தி.மு.க., நகராட்சி தலைவர் சுமிதா மற்றும் 23 கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் வழங்கினர்.

பெரியகுளம் நகராட்சியில் தற்போதுள்ள 29 கவுன்சிலர்களில், தி.மு.க.,-14, அ.தி.மு.க.,-6, மார்க்சிஸ்ட் 1, அ.ம.மு.க.,-3. வி.சி.-,2 . இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, அகில இந்திய பார்வர்டு பிளாக்-1, பா.ம.க.,-1, என உள்ளனர்.

நேற்று பெரியகுளம் நகராட்சி கூட்டம் தலைவர் சுமிதா தலைமையில் நடந்தது. இக் கூட்டத்தில்

அ.ம.மு.க., கவுன்சிலர்கள் வெங்கடேசன், பால்பாண்டி நகராட்சி துணைத் தலைவர் ராஜாமுகமது நகராட்சியையும், கவுன்சிலர்களையும் பொது இடங்களில் அவதூறாக பேசி வருகிறார். எனவே, அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என பேசினர். இதற்கு தி.மு.க., பா.ம.க., மார்க்சிஸ்ட், வி.சி., அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உட்பட 23 கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இதில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த அவரது தம்பி ஓ.சண்முக சுந்தரம், குருசாமி, ராணி ஆகியோர் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனை தொடர்ந்து கூட்டம் 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பின் நம்பிக்கையில்லா தீர்மான ஆதரவு கடிதத்தில் தலைவர் சுமிதா, 23 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டனர். சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக கூறி கமிஷனர் மீனாவிடம் தலைவர் கடிதம் கொடுத்தனர்.

இக் கடிதம் மதுரை மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனருக்கு அனுப்ப உள்ளதாக கமிஷனர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us