sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 அரசு ஊழியர்களை வீதியில் நிறுத்தியது தான் தி.மு.க.,சாதனை அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பேச்சு

/

 அரசு ஊழியர்களை வீதியில் நிறுத்தியது தான் தி.மு.க.,சாதனை அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பேச்சு

 அரசு ஊழியர்களை வீதியில் நிறுத்தியது தான் தி.மு.க.,சாதனை அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பேச்சு

 அரசு ஊழியர்களை வீதியில் நிறுத்தியது தான் தி.மு.க.,சாதனை அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பேச்சு


ADDED : டிச 06, 2025 09:51 AM

Google News

ADDED : டிச 06, 2025 09:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: 'நம்பி ஓட்டளித்த அரசு ஊழியர்களை வீதியில் நிறுத்தியது தான் தி.மு.க. அரசின் சாதனை,' என தேனியில் நடந்த ரோடு மறியல் போராட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தாஜூதீன் பேசினார்.

அவர் பேசியதாவது: பழனிசாமியை நம்ப வேண்டாம், வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம் என அன்றைய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியதை நம்பி தி.மு.க.,விற்கு ஓட்டளித்தோம். பல தொகுதிகளில் அரசு ஊழியர்கள் ஓட்டினால் தான் தி.மு.க., கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன.

ஆனால், நான்கரை ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் கோரிக்கைகளான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட எதையும் நிறைவேற்றவில்லை. அவர்கள் 2022ல் நடத்திய வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வெகுவாக பங்கேற்றோம். அப்போது, நிதிநிலை சீரடைந்ததும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறி ஏமாற்றிவிட்டனர்.

டிச., 13ல் மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டமும், ஜன., முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை தொடர் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம் என்றார்.






      Dinamalar
      Follow us