sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ரேஷன் பொருட்கள் வீடு தேடி வழங்கும் பணி நாளை துவக்கம்

/

ரேஷன் பொருட்கள் வீடு தேடி வழங்கும் பணி நாளை துவக்கம்

ரேஷன் பொருட்கள் வீடு தேடி வழங்கும் பணி நாளை துவக்கம்

ரேஷன் பொருட்கள் வீடு தேடி வழங்கும் பணி நாளை துவக்கம்


ADDED : ஆக 01, 2025 02:09 AM

Google News

ADDED : ஆக 01, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வீடுதேடி வழங்கும் திட்டம் 10 கடைகளில் நாளை முதல் சோதனை முறையில் அமல்படுத்தப்பட உள்ளதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகபடுத்தி உள்ளது. இந்த திட்டத்தில் மாவட்டத்தில் 45 ஆயிரம் பேர் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாளை(ஆக.,2) 10 ரேஷன் கடைகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் சுமார் 960 பேர் பயனடைவார்கள்

இத்திட்டத்தில் தாலுகா வாரியாக பெரியகுளத்தில் எருமலைநாயக்கன்பட்டி, தென்கரை, ஆண்டிபட்டியில் கொண்டமநாயக்கன்பட்டி, போடிதாசன்பட்டி, உத்தமபாளையம் வெள்ளையம்மாள்புரம், கம்பம் சின்னஓவலாபுரம், கூடலுாரில் ஒரு கடை, போடி கடை எண் 25 சோலையூர், சிறைக்காடு தேனியில் அல்லிநகரம் கடை எண் 10, டி.வி.எஸ்.,ரோடு கடை எண் 6, என 10 கடைகளில் இருந்து வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us