/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மேகமலையில் 31இடங்களில் வரையாடு கணக்கெடுப்புப் பணி ஏப். 27 வரை நடக்கிறது
/
மேகமலையில் 31இடங்களில் வரையாடு கணக்கெடுப்புப் பணி ஏப். 27 வரை நடக்கிறது
மேகமலையில் 31இடங்களில் வரையாடு கணக்கெடுப்புப் பணி ஏப். 27 வரை நடக்கிறது
மேகமலையில் 31இடங்களில் வரையாடு கணக்கெடுப்புப் பணி ஏப். 27 வரை நடக்கிறது
ADDED : ஏப் 25, 2025 07:03 AM
தேனி: தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடுகளின் கணக்கெடுப்புப் பணி மேகமலையில் நேற்று முதல் துவங்கி ஏப்., 27 வரை (4 நாட்கள்) நடக்க உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மேகமலை டிவிஷனில் 21 இடங்களிலும், மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள 10 இடங்கள் என மொத்தம் 31 இடங்களில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணிகள் நடக்கிறது. மேகமலையில் பயிற்சி பெற்ற 60 பேர் கணக்கெடுப்புப் பணிகளை நேற்று காலை முதல் துவக்கினர். மேகமலை பகுதியில் வெண்ணியார், இரவங்கலார்,மங்கலதேவி, தில்லுக்கோடி, ஆட்டுமொட்டை, படிக்காட்டுப் பாறை, பொம்மராஜபுரம், வெள்ளிமலை, சந்தனக்காவு, ஜோதி எஸ்டேட் உட்பட 21 பகுதிகளில் துவங்கி உள்ளன.
இதற்காக பயிற்சி பெற்ற 60 பேர் ஏப்.22 முதல் 23 வரை பயிற்சி பெற்று, பணிகளை துவக்கி உள்ளனர்.ஏப். 27 ல் சேகரித்த தரவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது என மேகமலை டிவிஷன் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் ஆனந்த் தெரிவித்தார்.
மாவட்ட வன அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் 10இடங்களில் பயிற்சி பெற்ற 30 வனத்துறையினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலர் சமர்த்தா தெரிவித்தார்.
மூணாறு: கேரளாவில் நடக்கும் கணக்கெடுப்பு துவக்க விழா ராஜமலையில் நடந்தது. தலைமை வன உயிரின பாதுகாவலர் பிரமோத் ஜி.கிருஷ்ணன் கணக்கெடுப்பை துவக்கி வைத்தார். தலைமை வனத்துறை அதிகாரிகள் அருண், பிரமோத், மூணாறு வன உயிரின பாதுகாவலர் ஹரிகிருஷ்ணன், உதவி பாதுகாவலர் நிதின்லால் உள்பட பலர் பங்கேற்றனர். ஏப்.27ல் நிறைவு பெறுகிறது.