sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கர்ப்பிணிகளுக்கு ஊக்கத்தொகை இரு தவணை வழங்காமல் இழுத்தடிப்பு; அங்கன்வாடி வரைபடம் அனுப்பாததால் பட்டுவாடா தாமதம்

/

கர்ப்பிணிகளுக்கு ஊக்கத்தொகை இரு தவணை வழங்காமல் இழுத்தடிப்பு; அங்கன்வாடி வரைபடம் அனுப்பாததால் பட்டுவாடா தாமதம்

கர்ப்பிணிகளுக்கு ஊக்கத்தொகை இரு தவணை வழங்காமல் இழுத்தடிப்பு; அங்கன்வாடி வரைபடம் அனுப்பாததால் பட்டுவாடா தாமதம்

கர்ப்பிணிகளுக்கு ஊக்கத்தொகை இரு தவணை வழங்காமல் இழுத்தடிப்பு; அங்கன்வாடி வரைபடம் அனுப்பாததால் பட்டுவாடா தாமதம்


ADDED : செப் 17, 2024 04:37 AM

Google News

ADDED : செப் 17, 2024 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம், : கர்ப்பிணிகளுக்கு முதல் இரண்டு தவணைகளில் வழங்கப்படும் ஊக்கத்தொகை ஆறு ஆண்டுகளாக வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

கர்ப்பிணிகளுக்கு மத்திய, மாநில அரசு சார்பில் கர்ப்ப காலம் மற்றும் பிரசவத்திற்கு பின் என மொத்தம் ரூ.18 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. கர்ப்பம் தரித்த பெண் முதல் மூன்று மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட கிராம செவிலியரிடம் பதிவு செய்ய வேண்டும்.

சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் பதிவு எண் வழங்கும். இந்த எண்ணை பதிவு செய்தவுடன் ரூ.4 ஆயிரம் சம்பந்தப்பட்ட கர்ப்பிணியின் வங்கி கணக்கில் வரவாகும். அடுத்த தவணை 6 மாதத்திற்குள் ரூ.4 ஆயிரம் வரவாகும்.

பின்னர் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள மாத்திரைகள், சத்து மாவுகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். பிரசவம் ஆன பின் குழந்தை 10 மாதம் ஆகும் போது தடுப்பூசி செலுத்தும் போது ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். தனியார் மருத்துவமனையில் பிரசவம் பார்த்தால் கடைசியாக வழங்கப்படும் ரூ. 4 ஆயிரம் கிடைக்காது.

இதில் முதல் ஆறு மாதங்களுக்குள் வழங்கப்படும் இரு தவணை தொகை ரூ.8 ஆயிரம் கடந்த 2018 ல் இருந்து தற்போது வரை ஆறு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இத்தொகையை கேட்டு தாய்மார்கள் ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனைகளுக்கு அலையாய் அலைகின்றனர்.

வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைக்கனும்


இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், முதல் இரண்டு தவணை தொகையை மத்திய அரசு வழங்குகிறது. இத் தொகை நிலுவையில் இருப்பதற்கு காரணம் சம்மந்தப்பட்ட அங்கன்வாடி வரைபடம் கேட்கப்பட்டது.

மாநில அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரைபடம் தந்தது. பின்னர் மத்திய அரசு கேட்ட அங்கன்வாடி வரைபடம் கடந்தாண்டு தயாரிக்கப்பட்டு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சக வெப்சைட்டில் 'அப்லோடு' செய்யப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு நிலுவை தொகையினை விடுவிக்கும் பணியை துவக்கி உள்ளது. வங்கி கணக்குகளில் குறைந்தபட்சம் ரூ.1200 இருந்தால் தான், உதவித் தொகை வரவாகும். பலர் தங்கள் கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாமல் உள்ளனர்.

இந்த காரணத்தாலும் பலருக்கு வரவாகாது. எனவே கர்ப்பிணிகள் தங்கள் வங்கி கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர்.






      Dinamalar
      Follow us