ADDED : டிச 27, 2024 07:15 AM
கூடலுார்: கூடலுார் நகராட்சி அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதில் தாமதம் ஏற்படுவதால் கிராமங்களில் குடிநீராக பயன்படுத்தும் மக்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 21 வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கருநாக்கமுத்தன்பட்டி அருகே முல்லைப் பெரியாற்றில் கலக்கிறது.
ஆற்றிலிருந்து நேரடியாக 'பம்பிங்' செய்து குடிநீர் 'சப்ளை' செய்யும் குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூர்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.இதனை தடுப்பதற்காக கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 2023ல் கூடலூர் நகராட்சி சார்பில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இடம் தேர்வு செய்வதில் ஏற்பட்ட குளறுபடியால் நிதி வீணானது. மீண்டும் நிதி ஒதுக்கி கட்டுமானப் பணியில் தாமதம் ஏற்படுவதால் கிராம மக்கள் கழிவு நீருடன் கலக்கும் குடிநீரை பருகி பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த சில நாட்களாக நோய் பரவி சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.