sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெரியாறு அணை பகுதியில் 'ட்ரோன் கேமரா சர்வே'

/

பெரியாறு அணை பகுதியில் 'ட்ரோன் கேமரா சர்வே'

பெரியாறு அணை பகுதியில் 'ட்ரோன் கேமரா சர்வே'

பெரியாறு அணை பகுதியில் 'ட்ரோன் கேமரா சர்வே'


ADDED : பிப் 10, 2024 01:04 AM

Google News

ADDED : பிப் 10, 2024 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணியரின் வாகனங்கள், படகு நிறுத்தப் பகுதியை ஒட்டி நிறுத்தப்பட்டன. புலிகள் சரணாலய பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி, குமுளி அருகே உள்ள ஆனைவச்சால் பகுதிக்கு, 2014ல் கார் பார்க்கிங் தற்காலிகமாக மாற்றப்பட்டது.

அணை நீர்த்தேக்கப் பகுதியில் பார்க்கிங் பகுதி அமைக்கப்பட்டதற்கு, தமிழக விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழக நீர்வளத்துறையினர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கிற்காக ஆனைவச்சால் கார் பார்க்கிங் பகுதியை சர்வே செய்து அறிக்கை அளிக்க, இந்திய நில அளவியல் துறைக்கு, 2023 டிச., 23ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, சில நாட்களுக்கு முன், மெயின் அணை, தேக்கடி ஷட்டர், ஆனைவச்சால் ஆகிய பகுதிகளில் ட்ரோன் கேமரா பறக்க விடப்பட்டு சர்வே செய்யப்பட்டது.

ஓரிரு நாட்களில் இப்பணியை முடித்து, இதற்கான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.






      Dinamalar
      Follow us