நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அரசு கலை,அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கல்லூரி முதல்வர் மணிகண்டன், பேராசிரியர் கதலி நரசிங்கப்பெருமாள், கல்லூரி நிர்வாக ஆலோசகர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தனர். கல்லூரி வளாகத்தில் துவங்கிய ஊர்வலம் ஆண்டிபட்டி வைகை ரோடு சந்திப்பில் முடிந்தது. போதை ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி மாணவர்கள் கோஷமிட்டு சென்றனர். ஏற்பாடுகளை கல்லூரி என்.எஸ்.திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.