sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தரம் உயரும் எட்டுபோலீஸ் ஸ்டேஷன்கள்

/

தரம் உயரும் எட்டுபோலீஸ் ஸ்டேஷன்கள்

தரம் உயரும் எட்டுபோலீஸ் ஸ்டேஷன்கள்

தரம் உயரும் எட்டுபோலீஸ் ஸ்டேஷன்கள்


ADDED : ஜூலை 27, 2025 12:24 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்டத்தில் வீரபாண்டி, கண்டமனுார், குமுளி உள்ளிட்ட 8 போலீஸ் ஸ்டேஷன்கள் இன்ஸ்பெக்டர்கள் நிலையில் தரம் உயர்த்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மாவட்டத்தில் தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, உத்தமபாளையம் என 5 சப்டிவிஷன்கள் உள்ளன. இந்த சப்டிவிஷன்களில் 5 மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் உட்பட 36 போலீஸ் ஸ்டேஷன்கள், இரு மதுவிலக்கு பிரிவு, ஒரு மாவட்ட குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவு போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.

போலீஸ் ஸ்டேஷன்கள் இன்ஸ்பெக்டர்கள் இன்றி இரு சப் இன்ஸ்பெக்டர்கள், 28 போலீசாருடன் இயங்குகின்றன.

இந்த போலீஸ் ஸ்டேஷன்களான வீரபாண்டி, க.விலக்கு, ஜெயமங்கலம், கூடலுார் தெற்கு, ஓடைப்பட்டி, கண்டமனுார், ராயப்பன்பட்டி, குமுளி ஆகிய 8 ஸ்டேஷன்களுக்கு தனி இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டு தரம் உயர்த்தப்பட உள்ளன. தரம் உயர்த்திய பின் ஒரு இன்ஸ்பெக்டர், இரு எஸ்.ஐ.,க்கள், 45க்கும் மேற்பட்ட போலீசார் என ஒரு ஸ்டேஷனில் 50 பேர் பணிபுரிவார்கள் என போலீசார் கூறினர். கூடுதல் போலீசார் பணிபுரிவதன் மூலம் வழக்குகள் விசாரணை விரைந்து மேற்கொள்ள வழிவகுக்கும்.






      Dinamalar
      Follow us