ADDED : நவ 17, 2025 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் லட்சுமி தலைமையில் தேனி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (நவ.18ல்) காலை 11:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை நடக்க உள்ளது.
இதில் தேனி, போடி, ராசிங்காபுரம் துணை மின் நிலையங்களுக்கு கட்டுப்பட்ட மின் நுகர்வோர்கள் பங்கேற்று, தங்களது குறைகளை எழுத்துப்பூர்வமாக வழங்கி தீர்வு காணலாம் என, செயற்பொறியாளர் சண்முகா தெரிவித்துள்ளார்.

