sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: கோயில்களில் பக்தர்கள் தரிசனம்

/

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: கோயில்களில் பக்தர்கள் தரிசனம்

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: கோயில்களில் பக்தர்கள் தரிசனம்

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: கோயில்களில் பக்தர்கள் தரிசனம்


ADDED : ஜன 02, 2025 07:10 AM

Google News

ADDED : ஜன 02, 2025 07:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி மாவட்டத்தில் நேற்று 2025 ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு பல்வேறு கோயில்களின் பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், கண்ணீஸ்வரமுடையார் கோயில், அல்லிநகரம்வீரப்ப அய்யனார் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், காளியம்மன் கோயில், சந்தை மாரியம்மன் கோயில், வேல்முருகன் கோயில், அல்லிநகரம் ஆஞ்சநேயர், வரதராஜபெருமாள் கோயில்களில் நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு,சிறப்பு பூஜைகள் நடந்தன.

பொதுமக்கள் குடும்பத்தினருடன் சென்றுசுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர். பெத்தாட்சிவிநாயகர் கோயில் மூலவருக்கு பூக்களால் ஆன அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள், அபிஷேகங்கள் நடந்தன.

கம்பம்: கம்பராயப்பெருமாள் கோயில், கவுமாரியம்மன் கோயில், வேலப்பர் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில், யோகநரசிங்க பெருமாள் கோயில், சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில், பெருமாள் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கோயில்களில் மக்கள் குடும்பத்தினருடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

போடி: சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலர் அலங்காரத்தில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை தக்கார் மாரிமுத்து செய்திருந்தார். போடி சுப்பிரமணியர் சுவாமி கோயில், கீழச் சொக்கநாதர், மேலச் சொக்கநாதர், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது.

பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயில் பாலசுப்பிரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. ஞானாம்பிகையம்மன் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில், வரதராஜப் பெருமாள் கோயிலில், கைலாசநாதர் கோயிலில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் காமாட்சியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆண்டிபட்டி: பால விநாயகர் கோயிலில் விநாயகருக்கு பால், பன்னீர், சந்தனம் உட்பட பல வகை அபிஷேகங்கள், அலங்காரம் செய்து வழிபட்டனர். மீனாட்சி சுந்தரேஸ்வரர், காளியம்மன், வீர ஆஞ்சநேயர், கோயில்கள், சக்கம்பட்டி முத்து மாரியம்மன், ராஜவிநாயகர், பகவதி அம்மன், நன்மை தருவார் ஐயப்ப சுவாமி, ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்க பெருமாள், சக்கரத்தாழ்வார் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் அதிகாலை முதலே சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us