sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

முல்லைப்பெரியாறு அணைக்கு செயற்பொறியாளர் நியமனம் * -தினமலர் செய்தி எதிரொலி

/

முல்லைப்பெரியாறு அணைக்கு செயற்பொறியாளர் நியமனம் * -தினமலர் செய்தி எதிரொலி

முல்லைப்பெரியாறு அணைக்கு செயற்பொறியாளர் நியமனம் * -தினமலர் செய்தி எதிரொலி

முல்லைப்பெரியாறு அணைக்கு செயற்பொறியாளர் நியமனம் * -தினமலர் செய்தி எதிரொலி


ADDED : மே 05, 2025 03:44 AM

Google News

ADDED : மே 05, 2025 03:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையில் ஓராண்டுக்குப் பின் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால் செயற்பொறியாளர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி தென் தமிழகப்பகுதியில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. மேலும் ஒரு கோடி மக்களுக்கும் மேல் குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை இருக்கிறது. அணை தமிழக நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனினும் அணை அமைந்துள்ள பகுதி கேரளாவில் இருப்பதால் அம்மாநில இடையூறு அதிகமாக உள்ளது.

அணை பராமரிப்பிற்காக தமிழக அரசு சார்பில் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள், படகு டிரைவர்கள் என 40க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர். இதில் அணை செயற்பொறியாளராக இருந்த சாம் இர்வின் , ஓராண்டிற்கு முன் பெரியாறு வைகை மதுரை கோட்டக் கண்காணிப்புப் பொறியாளராக பதவி உயர்வு பெற்று மாறுதலாகி சென்றார். அதன்பின் அணையில் இங்கு கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். கடந்த ஓராண்டுக்கு மேலாகியும் நிரந்தர செயற்பொறியாளர் நியமிக்கப்படவில்லை. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் மஞ்சளாறு வடிநில கோட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சப் டிவிஷனில் உதவி செயற்பொறியாளராக இருந்த செல்வம் பதவி உயர்வு பெற்று பெரியாறு அணை செயற்பொறியாளராக பொறுப்பேற்றார். இரு மாநிலங்களுக்கு இடையே அணை பிரச்னை இருந்து வரும் நிலையில் இந்த நியமனம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us