ADDED : அக் 07, 2024 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் அருகே ஜல்லிபட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் விவசாயி துரைப்பாண்டி 52. இவரது மனைவி வாணி 41. இருவரும் மேலக்காமக்காபட்டியில் தனது எலுமிச்சை தோட்டத்தில், சில தினங்களுக்கு முன் எலுமிச்சை செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தனர். அப்போது துரைப்பாண்டியை பாம்பு கடித்தது.
அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.--