ADDED : பிப் 20, 2025 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம், ஜெயமங்கலம் அருகே சிந்துவம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா 36. இவரது மனைவி ஜெயசித்ரா, மகன், மகள் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
இவரது தோட்டத்தில் வாழை விவசாயம் செய்து வந்தார். வாழைக்கு தண்ணீர் பாய்ச்ச மின் மோட்டார் இயக்க 'சுவிட்ச்' ஆன் செய்யும் போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே ராஜா பலியானார். ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

