sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மனைவியை கொலை செய்த விவசாயிக்கு ஆயுள்

/

மனைவியை கொலை செய்த விவசாயிக்கு ஆயுள்

மனைவியை கொலை செய்த விவசாயிக்கு ஆயுள்

மனைவியை கொலை செய்த விவசாயிக்கு ஆயுள்


ADDED : ஜூலை 10, 2025 10:46 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 10:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி மாவட்டம், வருஷநாடு அருகே மதுகுடிக்க பணம் தராத மனைவி அம்சகொடி 59,யை கொலை செய்த விவசாயி கணேசனுக்கு 65, ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வருஷநாடு குமணன்தொழு அருகே தளிப்பாறையை சேர்ந்த விவசாயி கணேசன் 65. மனைவி அம்சகொடி 59. மகன் மணிமாறன் பெங்களூரூவில் முறுக்கு வியாபாரம் செய்து வந்தார். கணேசன் மது குடித்துவிட்டு மனைவியை தாக்குவது வழக்கம். குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் கணேசன் தகராறில் ஈடுபட்டார். மணிமாறனிடம் அம்சகொடி அலைபேசியில் கூறவே அவர் தந்தையை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த கணேசன்2022 ஜன.,30ல் அம்சகொடியை கழுத்தை அறுத்து கொலை செய்தார். உடலை சாக்குமூடையில் கட்டிவைத்து மனைவியை காணவில்லை என நாடகமாடினார்.

துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விசாரணையில் மனைவியை கணேசன் கொலை செய்தது தெரிந்தது. கணேசனை மயிலாடும்பாறை இன்ஸ்பெக்டர் குமரேசன் கைது செய்தார்.இந்த வழக்கு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. அரசு வழக்கறிஞர் குருவராஜ் ஆஜரானார். கணேசனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி அனுராதா தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us