நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: டி சுப்புலாபுரம் அம்பேத்கர் நகரைச்சேர்ந்தவர் ராஜா 43, இவருக்கு மனைவி, இரு பிள்ளைகள் உள்ளனர்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராஜா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இரு நாட்களுக்கு முன் வயிற்று வலி தாங்காமல் தோட்ட பயன்பாட்டிற்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார்.
சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். மனைவி முத்துமணி புகாரில் எஸ்.ஐ., பன்னீர்செல்வம் விசாரித்து வருகிறார்.

