/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
செண்டு பூக்கள் விளைச்சல், விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
/
செண்டு பூக்கள் விளைச்சல், விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
செண்டு பூக்கள் விளைச்சல், விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
செண்டு பூக்கள் விளைச்சல், விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : டிச 19, 2024 05:42 AM

போடி: போடி பகுதியில் செண்டு பூக்கள் விளைச்சல் மட்டும் இன்றி நல்ல விலையும் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
போடி அருகே பொட்டிப்புரம், எரணம்பட்டி, மறவபட்டி, மீனாட்சிபுரம், உப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் மஞ்சள் செண்டு பூக்கள் பயிரிட்டு உள்ளனர். செண்டு பூக்கள் அதிகளவு பனி விழுந்தால் கருகி விடும். பனி இல்லாத காலங்களில் செண்டு பூக்கள் நன்கு விளைச்சல் ஏற்படும். இப் பூக்கள் மாலை கட்டுவதற்கு மட்டுமே பயன்படுகின்றன. செண்டு பூ கடந்த ஆண்டு சீசனில் விவசாயிகளிடம் கிலோ ரூ. 30 முதல் 40 விலையில் வாங்கினர். இந்த ஆண்டில் கடந்த மாதம் கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை விலை இருந்தது. தற்போது கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை வியாபாரிகள் விலைக்கு வாங்குகின்றனர். தற்போது விளைச்சலும், விலையும் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

