நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் பிள்ளையார் கோயில் தெரு பாலகிருஷ்ணன் 75.
வீட்டிலிருந்து லட்சுமிபுரம் கோம்பை பகுதியில் தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரை பார்வையிட சென்றுள்ளார். தோட்டத்தில் கிணற்றுக்கு அருகே மயங்கி கிடந்தார். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.
அதிலிருந்த செவிலியர், பாலகிருஷ்ணனை பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் இறந்துவிட்டதாக செவிலியர் தெரிவித்தார். பாலகிருஷ்ணன் மகன் குரு புகாரில், தென்கரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.-

