sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சிறப்பு நிவாரண திட்டம் அறிவிக்க ஏல விவசாயிகள் கோரிக்கை

/

சிறப்பு நிவாரண திட்டம் அறிவிக்க ஏல விவசாயிகள் கோரிக்கை

சிறப்பு நிவாரண திட்டம் அறிவிக்க ஏல விவசாயிகள் கோரிக்கை

சிறப்பு நிவாரண திட்டம் அறிவிக்க ஏல விவசாயிகள் கோரிக்கை


ADDED : மார் 16, 2025 06:58 AM

Google News

ADDED : மார் 16, 2025 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்; இடுக்கி மாவட்டத்தில் ஏல விவசாயிகளுக்கு சிறப்பு நிவாரண திட்டங்களை அறிவிக்க மத்திய மாநில அரசுகள் முன்வர ஏல விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

40 ஆயிரம் ஏக்கர் ஏலத்தோட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்தும் தொடர் நடவடிக்கை இல்லை என்று புலம்புகின்றனர்.

இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடியாகிறது. கம்பம், கூடலூர், தேவாரம், காமயகவுண்டன்பட்டி, புதுப்பட்டி, உத்தமபாளையம் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஏலக்காய் சாகுபடி செய்கின்றனர். தினமும் தேனி மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான ஜீப்புகளில் தொழிலாளர்கள் வேலைக்கு ஏலத்தோட்டங்களுக்கு சென்று வருகின்றனர்.

கடந்தாண்டு துவக்கத்தில் பல மாதங்களாக மழை பெய்யாமல் கடும் வெப்பம் நிலவியது. அதில் ஏலச் செடிகள் கருகியது.

பின் ஒரு மாதம் தொடர்ந்து பெய்த கனமழையால், ஏலச் செடிகளுக்கு அழுகல் நோய், காற்றில் ஒடிந்து விழுந்தது.

இதனால் மகசூல் பாதிப்பு 40 முதல் 50 சதவீதம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2024 மே மாதம் கேரள வேளாண் துறை அமைச்சர் பிரசாத், நீர்வளத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் ஆகியோர் வண்டன் மேடு, குமுளி, கம்பமெட்டு பகுதிகளில் வறட்சியால் பாதித்த ஏலத்தோட்டங்களை ஆய்வு செய்தனர்.

ஏலத்தோட்டங்கள் 40 ஆயிரம் ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது. 22 ஆயிரம் ஏல விவசாயிகளுக்கு ரூ.113 கோடி வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதர பயிர்கள் ரூ.60 கோடி வரை பாதிக்கப்பட்டுள்ளது. ஏலத்தோட்டங்களை இன்னமும் முழுமையாக கணக்கெடுக்க உள்ளோம். நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றனர்.

அதன் பின் தொடர் நடவடிக்கையும் இல்லை. எனவே இடுக்கி ஏல விவசாயிகளுக்கு சிறப்பு நிவாரண திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். ஏல விவசாயத்தை காக்க ஸ்பைசஸ் வாரியம் வர்த்தக அமைச்சகம் மூலம் மத்திய அரசிற்கு அழுத்தம் தர வேண்டும் என்று ஏல விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us