sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போடியில் இருந்து அகமலைக்கு பஸ் வசதி இன்றி விவசாயிகள் சிரமம்

/

போடியில் இருந்து அகமலைக்கு பஸ் வசதி இன்றி விவசாயிகள் சிரமம்

போடியில் இருந்து அகமலைக்கு பஸ் வசதி இன்றி விவசாயிகள் சிரமம்

போடியில் இருந்து அகமலைக்கு பஸ் வசதி இன்றி விவசாயிகள் சிரமம்


ADDED : டிச 07, 2024 08:22 AM

Google News

ADDED : டிச 07, 2024 08:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி ஒன்றியம், அகமலை ஊராட்சியில் கண்ணக்கரை, அகமலை, அண்ணா நகர், சொக்கன் அலை, பனங்கோடை, ஊரடி, ஊத்துக்காடு, குண்டேரி, கானக மிஞ்சி, மருதனூர், பட்டூர் உட்பட பல மலை கிராமங்கள் அடங்கி உள்ளன.

அகமலை, அண்ணாநகர் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். காப்பி, பலா, எலுமிச்சை, ஆரஞ்சு, ஏலம் போன்ற பயிர்கள் 4 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டு உள்ளன.

போடியில் இருந்து அகமலைக்கு நேரடி பஸ் வசதி இல்லாததினால் பெரியகுளம் சென்று அகமலைக்கு செல்ல வேண்டியது உள்ளது. அகமலைக்கு போதிய ரோடு வசதி இல்லாததால் மக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். பெரியகுளம் பகுதியில் இருந்து கண்ணக்கரை வரை பஸ்சில் சென்று அங்கிருந்து ஜீப்புகளிலும், நடந்து அகமலை செல்ல வேண்டியது உள்ளது.

ஜீப்பிற்காக நீண்ட நேரம் காத்திருப்பதன் மூலம் விவசாயிகள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலையில் சிரமம் அடைந்து வருகின்றனர். போடியில் இருந்து நேரடியாக பஸ் வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us