sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வெங்காய விளைச்சல் அதிகரித்தும் விலை இன்றி  விவசாயிகள் கண்ணீர்

/

வெங்காய விளைச்சல் அதிகரித்தும் விலை இன்றி  விவசாயிகள் கண்ணீர்

வெங்காய விளைச்சல் அதிகரித்தும் விலை இன்றி  விவசாயிகள் கண்ணீர்

வெங்காய விளைச்சல் அதிகரித்தும் விலை இன்றி  விவசாயிகள் கண்ணீர்


ADDED : செப் 28, 2025 03:33 AM

Google News

ADDED : செப் 28, 2025 03:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி மாவட்டத்தில் சின்ன வெங்காயம் விளைச்சல் அதிகரித்து உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலையில் உள்ளனர்.

மாவட்டத்தில் போடி, ராசிங்காரபுரம், தேனி ஒன்றியம் வெங்கடாஜலபுரம், ஸ்ரீரெங்காபுரம், குன்னுார், கண்டமனுார் பகுதிகளில்சின்னவெங்காயம் அதிகளவில் சாகுபடியாகிறது. சாரல், வெயில் என சீதோஷ்ண நிலை மாறி வருவதால் வெங்காயம் அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.

ஸ்ரீரெங்காபுரம் ஊராட்சியில் 6 ஏக்கரில் சின்னவெங்காயம் பயிரிட்ட விவசாயி சுதந்திர சுந்தரம் கூறியதாவது: வெங்காயம் 70 நாட்கள்பயிராகும். தற்போது ஏக்கருக்கு 50 மூடைகள் கிடைக்கிறது. (ஒரு மூடை 50 கிலோ) ஒரு கிலோ ரூ.28 முதல் ரூ.25 விலையில் கொள்முதல் செய்து, மதுரை ,திண்டுக்கல்லில் உள்ள வெங்காய சந்தைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

விளைச்சல் அதிகரித்த நிலையிலும் விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளோம். நடவு, பராமரிப்பு என ஏக்கருக்கு ரூபாய் ஒரு லட்சம் செலவழிக்கிறோம். ஆனால் லாபம்இல்லாத நிலைதான் தொடர்கிறது என்றார்.






      Dinamalar
      Follow us