/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இயற்கை உரத்திற்காக தக்கைப்பூண்டு வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம்
/
இயற்கை உரத்திற்காக தக்கைப்பூண்டு வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம்
இயற்கை உரத்திற்காக தக்கைப்பூண்டு வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம்
இயற்கை உரத்திற்காக தக்கைப்பூண்டு வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஜூன் 16, 2025 12:23 AM

போடி: இயற்கை உரத்திற்காக தக்கைப்பூண்டு செடிகளை வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நெல், சோளம், காய்கறி, கரும்பு, தென்னை உள்ளிட்ட பயிர் சாகுபடியில் இயற்கை உரங்களுக்கு பதிலாக விவசாயிகள், செயற்கை உரங்களை பயன்படுத்தி வந்ததால் அதிகளவு வரத்து காண முடிந்தது.
ஆனால் விவசாய நிலங்களில் மண்ணின் தன்மை குறைந்ததோடு, விளைப் பொருட்களின் சுவையும் குறைந்தது. இதனை தவிர்க்க மண்ணின் தன்மை வளப்படுத்தும் வகையில் செயற்கை உரங்களை பயன்படுத்தி வந்த விவசாயிகள் தற்போது மீண்டும் இயற்கை உரங்களுக்கு மாறத் துவங்கி உள்ளனர். போடி அருகே கூழையனுார், சடையால்பட்டி, காமராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இயற்கை உரங்களை பயன்படுத்தும் வகையில் தக்கைப்பூண்டு விதைகளை துாவி செடிகளாக வளர்த்து வருகின்றனர்.
இரண்டு மாதங்களில் நன்கு வளர்ந்த நிலையில் தக்கைப்பூண்டு செடிகளை உழுது அதே நிலத்தில் உரமாக பயன்படுத்தி வருகின்றனர்.
சூரிய ஒளி மூலம் செடிகளின் வேருக்கு நைட்ரஜன், புரோட்டின் சத்து கிடைத்து வருகிறது. மண்ணின் தன்மை மாறாமல் மண் புழுக்கள் இறக்காமல் உரமாகவும், தலை சத்தாகவும் பயன்படுகிறது. கால்நடைகளுக்கு நல்ல சத்தான தீவனமாக பயன்படுகிறது. இதனால் விவசாயிகள் தற்போது தக்கைப்பூண்டு செடிகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.