ADDED : ஏப் 03, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: கேரளா பிரபல நடிகர் மோகன்லால் நடித்து வெளியாகியுள்ள எம்புரான் திரைப்படத்தில் முல்லைப் பெரியாறு அணையை பற்றி தவறான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக கூறி கம்பத்தில் நேற்று விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தலைமையில் நடந்தது.
விவசாயிகள் பங்கேற்றனர். படத்தை தயாரித்த கோபாலன் என்பவருக்கு சொந்தமான 'கோகுலம் சிட்பண்டை இழுத்து மூடு' என்றும் கோஷங்கள் எழுப்பினர்.

