ADDED : பிப் 14, 2025 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: டி சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் 31, ஆட்டோ டிரைவர் இவரது மனைவி நாகேஸ்வரி 24, இவர்களது மகள் நிகிதா 3, டி.சுப்புலாபுரத்தில் வசித்து வந்த நிலையில் மூன்று நாட்களுக்கு முன் குழந்தையையுடன் கடைக்கு சென்று வருவதாக கூறிச் சென்ற ராஜ்குமார் திரும்ப வரவில்லை.
பல இடங்களில் தேடியும் உறவினரிடம் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மனைவி நாகேஸ்வரி புகாரில் ஆண்டிபட்டி எஸ்.ஐ., மணிகண்டன், குழந்தையுடன் மாயமான கணவரை தேடி வருகின்றனர்.

