நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி முதலியார் தெருவைச் சேர்ந்த முருகன் மனைவி ஜெயசுதா 42. சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் விஷம் குடித்தார்.
வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
--