sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

குமுளியில் கேரள கழிவுகள் கொட்ட முயன்றோருக்கு அபராதம்

/

குமுளியில் கேரள கழிவுகள் கொட்ட முயன்றோருக்கு அபராதம்

குமுளியில் கேரள கழிவுகள் கொட்ட முயன்றோருக்கு அபராதம்

குமுளியில் கேரள கழிவுகள் கொட்ட முயன்றோருக்கு அபராதம்


ADDED : ஜன 01, 2025 01:08 AM

Google News

ADDED : ஜன 01, 2025 01:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : தேனி மாவட்டம், கம்பம் வனத்துறையினர் தமிழகம்- - கேரளா எல்லையான குமுளி மலைப்பாதையில் ரோந்து சென்றனர்.

கேரளா பீர்மேடு அருகே பாம்பனாரைச் சேர்ந்த மினி லாரியில் ரப்பர் மற்றும் பாலிதீன் கழிவுகளை மலைப்பாதையில் கொட்ட முயன்றனர்.

அதைக் கண்ட வனத்துறையினர் தடுத்து நிறுத்தி, வாகனத்தில் வந்த பாம்பனாரைச் சேர்ந்த சுபாஷ், தாமஸ் ஆகியோருக்கு 200 ரூபாய் அபராதம் விதித்தனர். மினிலாரியை பறிமுதல் செய்தனர்.

வனத்துறையினர் கூறியதாவது: மீண்டும் இதுபோல செய்தால், 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தடை செய்யப்பட்ட கழிவுகளுக்கு ஏற்றார்போல அபராதத் தொகை விதிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us