ADDED : ஜூலை 04, 2026 11:53 PM

அ நிறம் | அளவு
தேனி: தேனி அருகே கொடுவிலார்பட்டியில் குமார் என்பவரின் பழைய இரும்பு குடோன் உள்ளது. இங்கு நேற்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் பாலமுருகன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ரூ. பல ஆயிரம் மதிப்புள்ள பழைய பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. விபத்து பற்றி பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
