sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மழையால் மிதக்கும் ஏலச் செடிகள்

/

மழையால் மிதக்கும் ஏலச் செடிகள்

மழையால் மிதக்கும் ஏலச் செடிகள்

மழையால் மிதக்கும் ஏலச் செடிகள்


ADDED : அக் 22, 2025 01:05 AM

Google News

ADDED : அக் 22, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இடுக்கி ஏலக்காய்க்கு கிராக்கி உள்ளது.

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், பெரும்பாலான ஏலத்தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள ஏலச் செடிகள், சிறு சிறு மண் சரிவுகள் ஏற்பட்டு செடிகள் சேதமடைந்துள்ளது. மேடாகவும், பள்ளமாகவும் உள்ள தோட்டங்களில், பள்ளங்களில் உள்ள செடிகள், மழை நீரில் மிதக்கின்றது.

மேட்டுப் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு செடிகள் பெயர்ந்து பள்ளத்தில் உள்ள தண்ணீரில் விழுந்து மிதக்கிறது.

தற்போது மூன்றாவது சுற்று காய் பறிப்பு நடந்து வருகிறது. இந்த சுற்றில்தான் அதிக மகசூல் கிடைக்கும். ஆனால் தொடர் மழை காரணமாக அழுகல் நோயும் ஏற்பட்டு மகசூல் இழப்பும் ஏற்பட்டுள்ளது.தொடர் மழை காரணமாக தோட்டங்களில் வேலை நிறுத்தப்பட்டுள்ளது. மண் சரிவு, மரக்கிளைகள் ஒடிந்து விழுவது ஏற்படுகிறது.

இது தொடர்பாக ஏல விவசாயி அருண் பிரசாத் கூறுகையில் ஏலச் செடிகளில் அழுகல் நோய் தாக்குதல் உள்ளது. மழையால் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது, என்றார்.






      Dinamalar
      Follow us