/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கொட்டகுடி ஆற்றில் வெள்ளம் அணைப்பிள்ளையார் அணையில் குளிக்க தடை
/
கொட்டகுடி ஆற்றில் வெள்ளம் அணைப்பிள்ளையார் அணையில் குளிக்க தடை
கொட்டகுடி ஆற்றில் வெள்ளம் அணைப்பிள்ளையார் அணையில் குளிக்க தடை
கொட்டகுடி ஆற்றில் வெள்ளம் அணைப்பிள்ளையார் அணையில் குளிக்க தடை
ADDED : அக் 21, 2025 04:06 AM

போடி: போடி பகுதியில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் கொட்டகுடி ஆற்றில் காட்டாற்று வெள்ளநீர் அதிகரித்து வருகிறது. இதனை ஒட்டி அணைப் பிள்ளையார் அணையில் குளிக்க தடை விதித்து, பாதுகாப்புப் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
போடி பகுதியில் சில மாதங்களாக மழை இல்லாததால் கொட்டகுடி ஆற்றுப் பகுதியில் நீர்வரத்து இன்றி, நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, நிலங்களும் வறண்டு காணப்பட்டன. கேரளா, போடி குரங்கணி, கொட்டகுடி, சிலமலை, சூலப்புரம், ராசிங்காபுரம் பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் கொட்டகுடி ஆற்றுப் பகுதியில் காட்டாற்று வெள்ள நீர் அதிகரித்து வருகிறது. போடி பங்காருசாமி நாயக்கர் கண்மாய், சங்கரப்பன் கண்மாய், மீனாட்சியம்மன் கண்மாய், புதுக்குளம் கண்மாய்களுக்கு நீர்வரத்து வந்த நிலையில் உள்ளது. போடி மூணாறு செல்லும் முந்தல் ரோட்டில் உள்ள அணைப்பிள்ளையார் அணை ஆற்றுப் பகுதியில் தடுப்பணையை தாண்டி காட்டாற்று வெள்ள நீர் பெருக்கெடுத்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள், பொது மக்கள் குளிக்க தடை விதித்து பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.