sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

/

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


ADDED : ஜூலை 19, 2025 11:53 PM

Google News

ADDED : ஜூலை 19, 2025 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: மேகமலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்து வரும் கன மழையால் நேற்று காலை சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது.சுருளி அருவியில் ஒவ்வொரு ஆண்டும் கோடையை தவிர்த்து ஆண்டு முழுவதும் அருவியில் தண்ணீர் கொட்டும். அடர்ந்த வனப்பகுதிகள் வழியாக அருவி இருப்பதால்,தண்ணீர் மூலிகை தன்மை நிறைந்ததாக உள்ளது. தேனி மாவட்டத்தின் சின்ன குற்றாலம் என்றழைக்கப்படும் இந்த அருவியில் குளிக்க தினமும் திரளாக சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மழை காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அந்த சமயங்களில் மட்டும் குளிக்க அனுமதிக்க மாட்டார்கள்.

கடந்த 23 நாட்களுக்கு முன் ஜுன் 26 ல் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சில நாட்களில் வெள்ள நீர் குறைந்ததால் குளிக்க அனுமதித்தனர். தற்போது முன்நேற்று முன்தினம் இரவு மேகமலை, இரவங்கலாறு ஹைவேவிஸ், மணலாறு பகுதியில் பெய்த கனத்த மழை காரணமாக, அருவியில் நேற்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ரேஞ்சர் பிச்சை மணி தலைமையிலான வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அருவியில் வெள்ளப் பெருக்கு குறைந்தவுடன், அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறை அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us