sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வாகனங்களை சேதப்படுத்தும் படையப்பா மதம் பிடித்ததால் வனத்துறை எச்சரிக்கை

/

வாகனங்களை சேதப்படுத்தும் படையப்பா மதம் பிடித்ததால் வனத்துறை எச்சரிக்கை

வாகனங்களை சேதப்படுத்தும் படையப்பா மதம் பிடித்ததால் வனத்துறை எச்சரிக்கை

வாகனங்களை சேதப்படுத்தும் படையப்பா மதம் பிடித்ததால் வனத்துறை எச்சரிக்கை


ADDED : பிப் 16, 2025 06:58 AM

Google News

ADDED : பிப் 16, 2025 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : படையப்பா யானைக்கு மதம் பிடித்ததால் வாகனங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.

மூணாறு பகுதியில் வலம் வரும் பிரபல படையப்பா ஆண் காட்டு யானை இரண்டு வாரங்களாக மதம் பிடித்த அறிகுறியுடன் சுற்றித் திரிகின்றது. அதனை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் ஒரு வாரமாக வலம் வரும் படையப்பா வாகனங்களை சேதப்படுத்தி வருகிறது.

இந்த ரோட்டில் மூணாறு அருகே 8ம் மைல் பகுதியில் சினிமா படப்பிடிப்பு குழுவினரின் வேனை பிப்.7 இரவு படையப்பா சேதப்படுத்தியது. வேனில் இருந்த ஆறு பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். வாகுவாரை எஸ்டேட் பாக்டரி பகுதியில் பிப்.12ல் இரவு 11:30 மணிக்கு டூவீலரை வழி மறித்து திருச்சூரைச் சேர்ந்த பில்ஜா 39, தாக்கியதில் பலத்த காயம் அடைந்தனர்.

பஸ்சை மறித்த யானை


உடுமலைபேட்டையில் இருந்து மூணாறை நோக்கி வந்த கேரள அரசு பஸ்சை 8ம் மைல் பகுதியில்இரு தினங்களுக்குமுன்இரவு 10:30 மணிக்கு வழி மறித்த படையப்பா பின் தொடர்ந்தது.ஒரு கட்டத்தில் தந்தங்களால் பஸ்சின் பின்பகுதியை சேதப்படுத்த முயற்சித்தது. அதனை பார்த்து பயணிகள்அலறிய நிலையில், டிரைவர் சாமர்த்தியமாக பஸ்சை இயக்கியதால்பயணிகள் தப்பினர்.அதே பகுதியில்இரவு தர்பூசணியுடன் சென்ற மினி லாரியை வழிமறித்த படையப்பா தர்பூசணி பழங்களை தின்றதுடன், லாரியை சேதப்படுத்தியது.

கண்காணிப்பு


மூணாறு வனத்துறையினர் ஐந்து பேர் கொண்ட குழுயானையைகண்காணித்தது, அதன் நடமாட்டத்தை உடனுக்குடன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து வருகின்றனர்.படையப்பாயானைக்குமதம் பிடித்துள்ளதால் அதன் அருகில் செல்லவும், போட்டோ எடுக்ககூடாது என மூணாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். நடமாட்டத்தை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us