sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 ரூ.2 கோடி கஞ்சா எண்ணெய் பறிமுதல் கேரளாவில் நால்வர் கைது

/

 ரூ.2 கோடி கஞ்சா எண்ணெய் பறிமுதல் கேரளாவில் நால்வர் கைது

 ரூ.2 கோடி கஞ்சா எண்ணெய் பறிமுதல் கேரளாவில் நால்வர் கைது

 ரூ.2 கோடி கஞ்சா எண்ணெய் பறிமுதல் கேரளாவில் நால்வர் கைது


ADDED : நவ 25, 2025 05:50 AM

Google News

ADDED : நவ 25, 2025 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: கேரளாவில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

கேரள மாநிலம் கொச்சி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் போதைப்பொருள் கும்பல் தங்கி இருப்பதாக கலால் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அங்கு சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு அறையில் தங்கி இருந்த பெண் உட்பட இருவரிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சமர முதலி 35, சுனமணி 37 என்பது தெரியவந்தது.

இந்த எண்ணெயை வாங்க வந்த கொச்சியை சேர்ந்த அஸ்வின் ஜோய் 32, ஸ்ரீராஜ் 37 ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.கஞ்சா எண்ணெய் மதிப்பு சர்வதேச சந்தையில் இரண்டு கோடி ரூபாய் இருக்கும் என்று கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கும்பல் இதற்கு முன்னரும் ஒடிசாவில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்து கேரளாவில் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us