/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புலியிடம் சிக்கி நான்கு பசுக்கள் பலி
/
புலியிடம் சிக்கி நான்கு பசுக்கள் பலி
ADDED : ஜன 15, 2024 12:09 AM
மூணாறு, : மூணாறு அருகே குண்டளை சான்டோஸ் மலைவாழ் மக்கள் வசிக்கும் காலனியைச் சேர்ந்த சண்முகத்தின் நான்கு பசுக்கள் புலியிடம் சிக்கி பலியான நிலையில் ஒரு பசு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி வருகிறது.
அவருடைய 5 பசுக்கள் நேற்று முன்தினம் மேய்ச்சலுக்குச் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பாததால் பல இடங்களில் தேடினர்.
அவற்றில் 4 பசுக்கள் குண்டளை புதுக்கடி பகுதியில் இறந்து கிடந்ததை நேற்று பார்த்தனர்.
அவை 2 முதல் 4 வயதுடைய பசுக்களாகும். அவற்றின் உடல் பாதி தின்ற நிலையில் கிடந்ததால் புலி தாக்கி கொன்றதாக தெரியவந்தது. அதனை வனத்துறையினரும் உறுதி செய்தனர்.
ஐந்தாவது பசுவை தேடியபோது அருகில் உள்ள காட்டில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தது. ஒரே நாளில் 5 பசுக்கள் புலியிடம் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.