sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 வகுப்பறையில் 'சீலிங்' விழுந்து நான்கு மாணவர்கள் காயம்

/

 வகுப்பறையில் 'சீலிங்' விழுந்து நான்கு மாணவர்கள் காயம்

 வகுப்பறையில் 'சீலிங்' விழுந்து நான்கு மாணவர்கள் காயம்

 வகுப்பறையில் 'சீலிங்' விழுந்து நான்கு மாணவர்கள் காயம்


ADDED : டிச 18, 2025 05:58 AM

Google News

ADDED : டிச 18, 2025 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: மூணாறு அருகே பைசன்வாலியில் அரசு மேல்நிலை பள்ளியில் வகுப்பறையில் 'சீலிங்' பெயர்ந்து விழுந்தது. இதில் நான்கு மாணவர்கள் காயம் அடைந்தனர்.

அங்கு ஓராண்டுக்கு முன்பு ரூ.10 கோடி செலவில் நவீன வகுப்பறைகளுக்கு கட்டடம் கட்டப்பட்டது. அதில் மாவட்ட ஊராட்சி சார்பில் ரூ.10 லட்சம் செலவில் கடந்த பிப்ரவரியில் ' சீலிங்' அமைக்கப்பட்டது. அந்த சீலிங்கின் ஒரு பகுதி நான்காம் வகுப்பறைக்குள் நேற்று முன்தினம் பெயர்ந்து விழுந்தது. அதனை அறிந்த மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியே ஓடினர். அப்போது சுவரில் மோதியும், கீழே விழுந்தும் நான்கு மாணவர்கள் காயம் அடைந்தனர்.

மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியேறியதும் மேலும் சீலிங் பெயர்ந்து மேஜை, பெஞ்ச் ஆகியவற்றின் மீது விழுந்தது.

கட்டுமானத்தில் ஏற்பட்ட குளறுபடியால் சீலிங் பெயர்ந்து விழுந்ததாக தெரியவந்தது. அச் சம்பவத்தை கண்டித்து பா.ஜ., கட்சியினர் பள்ளியில் போராட்டம் நடத்தினர்.

சீலிங் அமைத்ததில் பல்வேறு குளறுபடி ஏற்பட்டதாக பள்ளி நிர்வாகம் ஏற்கனவே மாவட்ட ஊராட்சியில் புகார் அளித்தது. அதனால் ஒப்பந்ததாரருக்கு நிதி வழங்கவில்லை. இந்நிலையில் தான் சீலிங் பெயர்ந்து விழுந்தது.






      Dinamalar
      Follow us