ADDED : அக் 18, 2024 06:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் அருகே கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. லட்சுமிபுரம் ரேணுகா வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பள்ளி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப், தலைவர் நாராயணன், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பெரியகுளம் அருகே ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் பவுர்ணமி பூஜை நடந்தது. கிருஷ்ணருக்கு 11 வகை அபிஷேகம் ஆராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை டாக்டர் மகா ஸ்ரீ ராஜன் செய்திருந்தார்.
--