/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுமி திருமணம்: ஐவர் மீது போக்சோ வழக்கு
/
சிறுமி திருமணம்: ஐவர் மீது போக்சோ வழக்கு
ADDED : நவ 18, 2024 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் பெரியகுளம் ஒன்றிய அலுவலகம் ஊர் நல அலுவலர் விஜயலட்சுமிக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டார்.
2022 ஜன 14ல் 18 வயது பூர்த்தியடையாத எனக்கு திருமணம் செய்து வைத்தனர். தற்போது எனக்கு 8 மாதம் பெண் குழந்தை உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரித்த விஜயலட்சுமி புகாரில், பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஜெயராணி, சிறுமியை திருமணம் செய்த கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த பாண்டி 30.
உடந்தையாக இருந்த தங்கவேல், லோகம்மாள், வேலம்மாள், வீரு சின்னு ஆகிய ஐவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.-