/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுமி கர்ப்பம்:4 பேர் மீது போக்சோ
/
சிறுமி கர்ப்பம்:4 பேர் மீது போக்சோ
ADDED : ஜூன் 18, 2025 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: தேனி அருகே அரண்மனைபுதூரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஆண்டிப்பட்டி சண்முகசுந்தரபுரத்தைச் சேர்ந்த குமரேசன் காதலித்து திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். கர்ப்பமான சிறுமி பிரசவத்திற்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார்.
சிறுமிக்கு நடந்த திருமணம் உறுதி செய்யப்பட்டதால் அவரது புகாரில் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த சண்முகசுந்தரபுரத்தைச் சேர்ந்த குமரேசன், செல்வம், அமுதா, அரண்மனைபுதூரைச் சேர்ந்த முனியம்மாள் ஆகியோர் மீது ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.