/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுமி கர்ப்பம்: நால்வர் மீது போக்சோ வழக்கு
/
சிறுமி கர்ப்பம்: நால்வர் மீது போக்சோ வழக்கு
ADDED : ஏப் 21, 2025 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு,: வருஷநாடு அருகே சிங்கராஜபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் அப்பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கும் 2023 ஜூன் 9ல் திருமணம் முடிந்தது.
தற்போது சிறுமி கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் மலர்கொடி விசாரணை நடத்தினார்.
அவர் அளித்த புகாரில் சிறுமியை திருமணம் முடித்த செல்வம், அவரது தந்தை கணேசன், தாய் பஞ்சம்மாள், சிறுமியின் தந்தை பூலோகம் ஆகியோர் மீது போக்சோ சட்டப்பிரிவில் வருஷநாடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.