பெரியகுளம்:  பெரியகுளம் மூன்றாந்தல் அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவருக்கு ஜெயந்தி விழா, குருபூஜை விழா நடந்தது.
அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், வர்த்தக பிரமுகர்கள், பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கம்பம்: தேவர் ஜெயந்தி விழாவையொட்டி மெயின்ரோட்டில் உள்ள தேவர் சிலைக்கு எம்.பி. தங்க தமிழ்செல்வன், எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், முக்குலத்தோர் சங்க தலைவர் குமரேசன், பிரமலை கள்ளர் சங்க தலைவர் நாராயணன், நமது மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜெகநாத் மிஸ்ரா , நகராட்சி தலைவர் வனிதா, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜெயபாண்டியன், முருகேசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தி.மு.க. அ.தி.மு.க. அகில இந்திய பார்வர்டு பிளாக் , தென் இந்திய பார்வர்டு பிளாக் , தமிழ் தேசிய பார்வர்டு பிளாக், உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.-

