sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சின்னமனுாரில் குப்பை சேகரம் செய்யும் பணியில் சுணக்கம்

/

சின்னமனுாரில் குப்பை சேகரம் செய்யும் பணியில் சுணக்கம்

சின்னமனுாரில் குப்பை சேகரம் செய்யும் பணியில் சுணக்கம்

சின்னமனுாரில் குப்பை சேகரம் செய்யும் பணியில் சுணக்கம்


ADDED : டிச 04, 2024 07:53 AM

Google News

ADDED : டிச 04, 2024 07:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனுார் : சின்னமனூரில் தினமும் வீடு வீடாக சென்று குப்பை சேகரிப்பதில் சுணக்க நிலை உள்ளது. இதனால் வீதிகளில் குப்பை குவித்து வைக்கப்படுகிறது.

சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரம் மக்கள் தொகை உள்ளது. நகரில் லட்சுமி நகர், எழில் நகர், அண்ணாமலை நகர், மின் நகர், சிவசக்தி நகர், கண்ணம்மா கார்டன் என விரிவாக்க பகுதிகள் அதிகரித்து வருகிறது. நகராட்சியில் அத்தியாவசிய பணிகளில் சேகரமாகும் குப்பைகளை தினமும் வீடு வீடாக சேகரித்து அதை மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து மேலாண்மை செய்ய வேண்டும். இதற்கென திடக்கழிவ மேலாண்மை திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கீடுகள் தரப்படுகிறது.

சின்னமனுாரை பொறுத்தவரை தினமும் வீடு வீடாக சென்று குப்பை வாங்கும் பணிகள் முடங்கியுள்ளது . குறிப்பாக தெற்கு ரத வீதி , மெயின்பஜாரில் 4 நாட்களுக்கு ஒரு முறை வருகின்றனர். இதனால் பொதுமக்கள் தெருவில் குப்பை கொட்டுகின்றனர். காற்றுக்கு குப்பைகள் மெயின் ரோட்டில் பறக்கிறது. மேலும் தெரு நாய்க் கூட்டம் குப்பைகளை கிளறி பறக்க விடுகிறது . இதனால் மெயின் ரோட்டில் வர்த்தகர்கள் கடையில் அமர்ந்து வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. நகராட்சி துப்புரவு பிரிவின் இந்த சுணக்க நடவடிக்கையால் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர் . குப்பைகளை தினமும் வீடு வீடாக சேகரம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us