ADDED : மார் 27, 2025 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் அரசுப்பணியாளர் சங்கம் சார்பில் பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை, பொருட்களை பொட்டலமாக வழங்குதல் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட சிறப்புத்தலைவர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பாண்டி, சேதுராம், பொன்அமைதி, அய்யனார் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.