sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 வருஷநாடு மலைக் கிராமங்களுக்கு அரசு டவுன் பஸ் வசதி தேவை

/

 வருஷநாடு மலைக் கிராமங்களுக்கு அரசு டவுன் பஸ் வசதி தேவை

 வருஷநாடு மலைக் கிராமங்களுக்கு அரசு டவுன் பஸ் வசதி தேவை

 வருஷநாடு மலைக் கிராமங்களுக்கு அரசு டவுன் பஸ் வசதி தேவை


ADDED : நவ 26, 2025 03:21 AM

Google News

ADDED : நவ 26, 2025 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு: வருஷநாடு அருகே மலைக் கிராமங்களில் நிறுத்தப்பட்ட டவுன் பஸ் சேவையை, மீண்டும் அதே வழித்தடத்தில் துவக்க பொது மக்கள் வலியுறுத்து உள்ளனர்.

வருசநாட்டில் இருந்து சிங்கராஜபுரம், பூசனுாத்து, மேலப்பூசனுாத்து, காந்திபுரம், புதுக்கோட்டை, அரண்மனைப்புதுார், காமன்கல்லுார், குமணன்தொழு வழியாக கடமலைக்குண்டு செல்ல அரசு டவுன் பஸ் வசதி இருந்தது.

இப்பகுதியில் ரோடு சேதமானதால் கடந்த சில மாதங்களுக்கு முன், டவுன் பஸ் சேவை நிறுத்தப்பட்டது.

தற்போது இப்பகுதிகளில் ரோடுகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. ஆனால் நிறுத்தப்பட்ட டவுன் பஸ் சேவை மீண்டும் துவக்கப்பட வில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் கூறியதாவது:

வருஷநாட்டில் இருந்து சிங்கராஜபுரம், பூசனுாத்து வழியாக 8 மலைக் கிராமங்களை கடந்து அரசு டவுன் பஸ் காலை 9:00 மணி, மாலை 4:00 மணிக்கு கடமலைக்குண்டு சென்று வந்தது.

பொது மக்கள் இதனை பயன்படுத்தி வந்தனர். தற்போது பஸ் சேவை நிறுத்தப்பட்டு உள்ளதால் 24 கி.மீ., தூரத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. இப்பகுதியில் நிறுத்தப்பட்ட டவுன் பஸ் சேவையை மீண்டும் துவக்க வேண்டும் என, தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us