/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இறந்தவருக்கு நிவாரண தொகை வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
/
இறந்தவருக்கு நிவாரண தொகை வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
இறந்தவருக்கு நிவாரண தொகை வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
இறந்தவருக்கு நிவாரண தொகை வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
ADDED : அக் 17, 2024 06:16 AM
கம்பம்: இறந்தவருக்கு வழங்க வேண்டிய நிவாரண தொகையை வழங்காததால், அரசு போக்குவரத்துத்துறை பஸ், நீதிமன்ற உத்தரவில் ஜப்தி செய்யப்பட்டது.
போடியை சேர்ந்த பாண்டியன் மகன் அருண் பாண்டியன் 19. இவர் 2017ல் பிப்ரவரி 16 ல் தேனி போடி ரோட்டில் கோடாங்கிபட்டி அருகே அரசு பஸ் மோதி இறந்தார்.
இந்த வழக்கு சென்னையில் உள்ள சிறு வழக்குகள் தொடர்பான நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரண தொகையாக ரூ.12 லட்சத்து 23 ஆயிரத்து 500 வழங்கவும், வழக்கை உத்தமபாளையம் சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.
இந்நிலையில் உத்தமபாளையம் சார்பு நீதிமன்ற நீதிபதி சிவாஜி செல்லையா வழக்கை விசாரித்து நிவாரண தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.18 லட்சத்து 63 ஆயிரத்து 525 வழங்க உத்தரவிட்டார்.
மேலும் இந்த நிவாரண தொகை வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
அதன் பேரில் நேற்று காலை கம்பம் பஸ் ஸ்டாண்டில் திருச்சி செல்வதற்காக பயணிகளை ஏற்றி தயாராக இருந்த அரசு போக்குவரத்துத்துறை பஸ் டிரைவரிடம் ஜப்திக்கான உத்தரவை வழக்கறிஞர் மன்னர்மன்னன், நீதிமன்ற அமீனா ஆகியோர் வழங்கினர்.
பயணிகளை இறக்கி விட்டு பஸ்சை ஜப்தி செய்து உத்தமபாளையம் நீதிமன்ற வளாகத்திற்கு பஸ்சை ஓட்டிச் சென்றனர்.